Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing

Showing posts with label பிரதோஷ கால முறை. Show all posts
Showing posts with label பிரதோஷ கால முறை. Show all posts

Sunday, 16 November 2014

பிரதோஷ கால முறை

பிரதோஷ காலத்தில் முதலில் நந்திதேவருக்கு அபிஷேகம் செய்து அலங்கரிக்க வேண்டும். அரிசி மாவினால் அகல் செய்து தூய்மையான பசு நெய் ஊற்றி பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்ற வேண்டும். அருகம்புல் மாலை சாற்றி, வெல்லம் கலந்த பச்சரிசியை நிவேதனம் செய்து வழிபாடு செய்ய வேண்டும்.
பிரதோஷ கால அபிஷேக முறையில் "பால் அபிஷேகம்'' என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஆகவே பக்தர்கள் தங்கள் வீட்டிலிருந்து இயன்றளவு பால் கொண்டு வந்து கொடுத்து அபிஷேகத்தில் கலந்து கொள்வது சிறப்பான பலனைத் தரும்.
அத்துடன் தாய்மார்கள் பால் குடம் எடுத்துக் கொண்டு முறையாக கோவிலை ஒருமுறை வலம் வந்து, பிறகு அக்குடங்களில் உள்ள பாலைக் கொண்டே அபிஷேகம் செய்வது என்பது மிகவும் சிறப்பான பலனைத் தரும். நந்திதேவருக்கு அபிஷேகம் செய்யும் அதே நேரத்தில், தேவியுடன் கூடிய சந்திரசேகர சாமிக்கும் அபிஷேகம் செய்து அலங்கரித்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும்.
பிறகு கோவிலை மூன்று முறை வலம் வரச் செய்ய வேண்டும். கூடவே நாமும் உடன் சென்று வலம் வருதல் வேண்டும். அப்போது முதல் சுற்றில் வேதபாராயணமும், இரண்டாவது சுற்றி திருமுறைபாராயணமும், மூன்றாவது சுற்றில் நாதஸ்வர இன்னிசையும் இசைக்க வேண்டும்.
அத்துடன், பிரதோஷ காலத்தில் சாமி வலம் வரும்போது வெண்சாமரம் வீசுவதுடன், குளிர்ச்சி தரும் மருத்துவ குணம்கொண்ட மயில்பீலியிலான விசிறிகளைக் கொண்டு வீசுவதும் மிகுந்த பலன் தருவதாகும். சிவபெருமான் நஞ்சுண்டு களைத்திருந்த நேரத்தில் அஸ்வினி தேவர்கள் மயில்பீலியைக் கொண்டு விசிறினார்கள் என்கிறது புராணம்.
சாமி வலம் வரும் ஒவ்வொரு சுற்றிலும் மூலகோண திசைகளில் கண்டிப்பாக தீப வழிபாடு செய்ய வேண்டும். அத்துடன் சாமி மூன்றாவது சுற்றுவரும் போது மட்டும் வடகிழக்கு மூலையான ஈசான மூலையில் சாமியைத் தெற்கு திசை நோக்கி இருக்குமாறு சிறிது நேரம் நிறுத்தி சிறப்பு தீபவழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை "பூத நிருத்த வழிபாடு'' என்று கூறுவர்.
அந்த நேரத்தில் சாமியைத் தரிசித்து வணங்கி வழிபாடு செய்வது பெரும் புண்ணியமாகும். அவ்வாறு சாமி அன்னையுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வலம் வரும் அழகை தரிசித்து பலன் பெற விரும்புவோர் முதலில் நந்திதேவரைத் தரிசித்து, பிறகு அன்னையைத் தரிசித்து, அதன் பிறகுதான் ஈசனை தரிசித்து வணங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க.
1.சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான்.
2.பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. எனவே ஈசுவரனிடம் நாம் ஒடுங்க அதுவே சரியான நேரம்.
3.பிரதோஷ நேரத்தில் ஈசுவரன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொள்வதாக ஐதீகம்.
4.பிரதோஷ நேரத்தில் சிவன் ஆடுகின்ற ஆனந்த நடனத்தை தேவர்களும், முனிவர்களும் கண்டுகளிப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
5.சிவபெருமான் விஷம் குடித்தது சனிக்கிழமை. எனவே சனி பிரதோஷம் மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.
6.நித்திய பிரதோஷம், பட்ச பிரதோஷம், மாதப்பிர தோஷம், மகாப்பிரதோஷம், பிரயைப்பிரதோஷம் என பிரதோஷம் 5 வகைப்படும்.
7.தினமும் அதிகாலை சூரியன் மறைவதற்கு மூன்று நாழிகைக்கு முன்பு, நட்சத்திரங்கள் தோன்றும் வரை உள்ள காலம் நித்திய பிரதோஷம் ஆகும்.
8. சுக்லபட்ச சதுர்த்தியின் மாலை நேரம் பட்ச பிரதோஷமாகும்.
9.கிருஷ்ணபட்ச திரயோதசி தினத்தை மாத பிரதோஷம் என்கிறார்கள்.
10.பிரளய காலத்தில் எல்லாம் சிவனிடம் ஒடுங்குவதால் அது பிரளய பிரதோஷம் என்றழைக்கப்படுகிறது.
11.பிரதோஷ நேரத்தில் சிவாலயத்தில் இருக்க இயலா விட்டாலும், ஈசுவரனை மனதில் நினைத்து கொண்டால் நினைத்தது நடக்கும்.
12.இரவும்,பகலும் சந்திக்கும் நேரத்துக்கு உஷத்காலம் என்று பெயர். இந்த வேளையின் அதிதேவதை சூரியனின் மனைவி உஷாதேவி. அதே போல பகலும், இரவும் சந்திக்கும் நேரம் பிரத்யஷத் காலம். இதன் அதிதேவதை சூரியனின் மற்றொரு தேவியாகிய பிரத்யுஷா. அவள் பெயரால் அந்த நேரம் பிரத்யுஷத் காலம் என அழைக்கப்பட்டது. நாளடைவில் அது பேச்சு வழக்கில் "பிரதோஷ காலம்'' ஆகிவிட்டது.
13.பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் மறுமையிலும் பலன்கள் கிடைக்கும்.
14.சனிப்பிரதோஷம் தினத்தன்று விரதம் தொடங்கி, பிரதோஷம் தோறும் விரதம் இருந்து வந்தால், ஈசுவரனிடம் நீங்கள் வைக்கும் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும்.
15.பிரதோஷ நாட்களில் தவறாது விரதம் இருந்து வழிபட்டால் கடன், வறுமை, நோய், பயம், மரண வேதனை நீங்கும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்து.
16.பச்சரிசி, பயித்தம் பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அதை வடிகட்டி வெல்லம், தேங்காய்ப்பூ சேர்த்து காப்பரிசி தயாரிக்க வேண்டும். பிரதோஷ காலத்தில் இந்த காப்பரிசி நிவேதனத்தை நந்திக்கு சமர்பிப்பது மிகவும் சிறப்பானது.
17.பிரதோஷ கால விரதம் தொடங்குவோர் ஆவணி, கார்த்திகை ஆகிய மாதங்களில் தொடங்குவது மகா உத்தமம்.
18.பிரதோஷ நேரத்தில் பெருமாள் கயிலாய மலையில் இருப்பதால், பிரதோஷ நேரத்தில் பெருமாள் கோவில்களில் திரை போட்டு மூடி இருப்பார்கள்.
19.ஆண்டுக்கு 25 தடவை பிரதோஷம் வருகிறது.
20.ஒவ்வொரு பிரதோஷத்திலும் வில்வ இலை அலங்காரம் செய்து பூஜித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.*



Monday, 13 October 2014

ஶ்ரீ கணேஶபுராணே ஶ்ரீ கணேஶ கவசம்


ஏஷோதி சபலோ தைத்யான் பால்யேபி னாஶயத்யஹோ |அக்ரே கிம் கர்ம கர்தேதி ன ஜானே முனிஸத்தம || 1 ||
தைத்யா னானாவிதா துஷ்டாஸ்ஸாது தேவத்ருமஃ கலாஃ |அதோஸ்ய கம்டே கிம்சித்த்யம் ரக்ஷாம் ஸம்பத்துமர்ஹஸி || 2 ||
த்யாயேத் ஸிம்ஹகதம் வினாயகமமும் திக்பாஹு மாத்யே யுகேத்ரேதாயாம் து மயூர வாஹனமமும் ஷட்பாஹுகம் ஸித்திதம் | ஈத்வாபரேது கஜானனம் யுகபுஜம் ரக்தாம்கராகம் விபும் துர்யேது த்விபுஜம் ஸிதாம்கருசிரம் ஸர்வார்ததம் ஸர்வதா || 3 ||
வினாயக ஶ்ஶிகாம்பாது பரமாத்மா பராத்பரஃ |அதிஸும்தர காயஸ்து மஸ்தகம் ஸுமஹோத்கடஃ || 4 ||
லலாடம் கஶ்யபஃ பாது ப்ரூயுகம் து மஹோதரஃ |னயனே பாலசம்த்ரஸ்து கஜாஸ்யஸ்த்யோஷ்ட பல்லவௌ || 5 ||
ஜிஹ்வாம் பாது கஜக்ரீடஶ்சுபுகம் கிரிஜாஸுதஃ |வாசம் வினாயகஃ பாது தம்தான்‌ ரக்ஷது துர்முகஃ || 6 ||
ஶ்ரவணௌ பாஶபாணிஸ்து னாஸிகாம் சிம்திதார்ததஃ |கணேஶஸ்து முகம் பாது கம்டம் பாது கணாதிபஃ || 7 ||
ஸ்கம்தௌ பாது கஜஸ்கம்தஃ ஸ்தனே விக்னவினாஶனஃ |ஹ்றுதயம் கணனாதஸ்து ஹேரம்போ ஜடரம் மஹான் || 8 ||
தராதரஃ பாது பார்ஶ்வௌ ப்றுஷ்டம் விக்னஹரஶ்ஶுபஃ |லிம்கம் குஹ்யம் ஸதா பாது வக்ரதும்டோ மஹாபலஃ || 9 ||
கஜக்ரீடோ ஜானு ஜம்கோ ஊரூ மம்களகீர்திமான் |ஏகதம்தோ மஹாபுத்திஃ பாதௌ குல்பௌ ஸதாவது || 10 ||
க்ஷிப்ர ப்ரஸாதனோ பாஹு பாணீ ஆஶாப்ரபூரகஃ |அம்குளீஶ்ச னகான் பாது பத்மஹஸ்தோ ரினாஶனஃ || 11 ||
ஸர்வாம்கானி மயூரேஶோ விஶ்வவ்யாபீ ஸதாவது |அனுக்தமபி யத் ஸ்தானம் தூமகேதுஃ ஸதாவது || 12 ||
ஆமோதஸ்த்வக்ரதஃ பாது ப்ரமோதஃ ப்றுஷ்டதோவது |ப்ராச்யாம் ரக்ஷது புத்தீஶ ஆக்னேய்யாம் ஸித்திதாயகஃ || 13 ||
தக்ஷிணஸ்யாமுமாபுத்ரோ னைறுத்யாம் து கணேஶ்வரஃ |ப்ரதீச்யாம் விக்னஹர்தா வ்யாத்வாயவ்யாம் கஜகர்ணகஃ || 14 ||
கௌபேர்யாம் னிதிபஃ பாயாதீஶான்யாவிஶனம்தனஃ |திவாவ்யாதேகதம்த ஸ்து ராத்ரௌ ஸம்த்யாஸு யஃவிக்னஹ்றுத் || 15 ||
ராக்ஷஸாஸுர பேதாள க்ரஹ பூத பிஶாசதஃ |பாஶாம்குஶதரஃ பாது ரஜஸ்ஸத்த்வதமஸ்ஸ்ம்றுதீஃ || 16 ||
ஜ்ஞானம் தர்மம் ச லக்ஷ்மீ ச லஜ்ஜாம் கீர்திம் ததா குலம் | ஈவபுர்தனம் ச தான்யம் ச க்றுஹம் தாராஸ்ஸுதான்ஸகீன் || 17 ||
ஸர்வாயுத தரஃ பௌத்ரான் மயூரேஶோ வதாத் ஸதா |கபிலோ ஜானுகம் பாது கஜாஶ்வான் விகடோவது || 18 ||
பூர்ஜபத்ரே லிகித்வேதம் யஃ கம்டே தாரயேத் ஸுதீஃ |ன பயம் ஜாயதே தஸ்ய யக்ஷ ரக்ஷஃ பிஶாசதஃ || 19 ||
த்ரிஸம்த்யம் ஜபதே யஸ்து வஜ்ரஸார தனுர்பவேத் |யாத்ராகாலே படேத்யஸ்து னிர்விக்னேன பலம் லபேத் || 20 ||
யுத்தகாலே படேத்யஸ்து விஜயம் சாப்னுயாத்த்ருவம் |மாரணோச்சாடனாகர்ஷ ஸ்தம்ப மோஹன கர்மணி || 21 ||
ஸப்தவாரம் ஜபேதேதத்தனானாமேகவிம்ஶதிஃ |தத்தத்பலமவாப்னோதி ஸாதகோ னாத்ர ஸம்ஶயஃ || 22 ||
ஏகவிம்ஶதிவாரம் ச படேத்தாவத்தினானி யஃ |காராக்றுஹகதம் ஸத்யோ ராஜ்ஞாவத்யம் ச மோசயோத் || 23 ||
ராஜதர்ஶன வேளாயாம் படேதேதத் த்ரிவாரதஃ |ஸ ராஜானம் வஶம் னீத்வா ப்ரக்றுதீஶ்ச ஸபாம் ஜயேத் || 24 ||
இதம் கணேஶகவசம் கஶ்யபேன ஸவிரிதம் |முத்கலாய ச தே னாத மாம்டவ்யாய மஹர்ஷயே || 25 ||
மஹ்யம் ஸ ப்ராஹ க்றுபயா கவசம் ஸர்வ ஸித்திதம் |ன தேயம் பக்திஹீனாய தேயம் ஶ்ரத்தாவதே ஶுபம் || 26 ||
அனேனாஸ்ய க்றுதா ரக்ஷா ன பாதாஸ்ய பவேத் வ்யாசித் |ராக்ஷஸாஸுர பேதாள தைத்ய தானவ ஸம்பவாஃ || 27 ||
|| இதி ஶ்ரீ கணேஶபுராணே ஶ்ரீ கணேஶ கவசம் ஸம்பூர்ணம் ||

Irumpili Kali Devotees

LinkWithin

Connect with FB

Disclaimer:

The information provided in this website might be wrong or old information. Please add a comment above to get the information corrected

Labels

#RamaNavami #LordRama #Ramar (1) #இராமநாமமகிமை #ராமநாமமகிமை (1) #உங்களுக்குதெரிந்திருக்கலாம் (1) 27 நட்சித்திரகும் அவர் அவர் நட்சித்திர காயத்திரி (1) Bhakti Yoga (2) Blogger (11) IFTTT (12) jnana yoga (2) lord ganesha (3) lord iyyappan (1) lord murugan (4) Mantras (3) Meditation (1) Nar Seva Narayana Seva (1) Navaratri (1) Sri Chakra Nava Avarana Puja (1) WordPress (1) அகஸ்தியர் (1) அகிலாண்டேஸ்வரி (3) அனுமன் (3) ஆஞ்சநேயர் (1) ஆடி அமாவாசை (1) ஆதித்யன் (1) ஆவணி அவிட்டம் (2) ஏழு கன்னிமார்கள் (1) ஐயப்பன் (3) ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் அபிஷேகம் செய்ய வேண்டிய பொருள்கள் (1) கடை வீடுகளில் திருஷ்டி (2) கந்த சஷ்டி கவசம் (1) கால பைரவர் (3) காளி (13) கோலமிடுவதால் ஏற்படும் நன்மைகள் (2) சகஸ்ர நாம அர்ச்சனை (1) சக்கரத்தாழ்வார் (1) சங்கடஹர சதுர்த்தி (1) சமஸ்கிருத மொழி (1) சம்ஸ்கிருதம் (2) சரஸ்வதி (3) சரஸ்வதி அஷ்டோத்திர சத நாம ஸ்தோத்திரம் (2) சர்வம் கிருஷ்ணார்ப்பணம் அஸ்து (1) சனி திசை (1) சனி புத்தி (1) சிதம்பரம் நடராஜர் (1) சூரிய பகவான் (2) தண்டாயுதபாணி (2) தானம் - பலன்கள் (1) திருப்பதி ஏழுமலையான் (1) திருமண மந்திரங்கள் (2) தீப ஆராதனைகளின் விளக்கங்கள் (2) தீபாவளியின் வரலாறு & தீபாவளி தானம் (3) துர்க்கா தேவி (11) துளசி (1) துளசியின் சிறப்பும் (1) தை மாதம் (1) நவக்கிரக மந்திரங்கள் (3) நாக தோசம் பரிகாரம் -ராகு -கேது (1) நாகசதுர்த்தி விரதம் (1) பசுவின் கோமியத்தில் (1) பஞ்ச தெய்வங்கள் (2) பிரகதீஸ்வரர் (1) பிரகஸ்பதி (1) பிரதோஷ கால முறை (2) பெருமையும் (1) முத்துக்குமரன் (3) வல்லப மஹா கணபதி (2) வள்ளி மணாளன் (3) விறல் மாரனைந்து திருப்புகழை (1) வீட்டில் பூஜைகளில் உபயோகிக்கக் கூடாத சுவாமி படங்கள் (2) வேலை கிடைக்க மந்திரம் (2) ஸ்ரீ சரபேஸ்வரர் (2) ஸ்ரீ லட்சுமி சங்கு ஸ்லோகம் (1) ஹயக்ரீவர் (1)