Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing

Monday 13 October 2014

'மங்கல சண்டிகா' - செவ்வாய்க்கிழமை ராகு கால துர்க்கை வழிபாடு..!

செவ்வாய்க்கிழமை ராகு கால துர்க்கை வழிபாடு..! 


இந்துக்கள் பயப்படும் விஷயங்களின் லிஸ்ட் பெரிசு. 

அந்த பட்டியலில் சனிக்கிரகம், ராகு காலம் முதலியவையும் அடங்கும். ராகு காலம் எல்லா நல்ல காரியங்களுக்கும் விலக்கு என்று நினைக்கப் பழக்கப் படுத்திக்கொண்டுவிட்டோம். ஆனால் ராகு காலத்தில் செய்யக்கூடிய சில விசேட பூஜைகள் இருக்கின்றன. அந்தப் பூஜைகளை ராகு காலத்தில் செய்தால்தான் அவற்றின் ஆற்றல்கள் கூடுதலாகும். 

ராகு காலம் என்பது மூன்றே முக்கால் நாழிகை கொண்டது. மூன்றே முக்கால் நாழிகை என்பதை ஒரு முகூர்த்த காலம் என்பார்கள். ஒரு நாழிகைக்கு சர்வதேச கால அலகையால் இருபத்து நான்கு நிமிடங்கள். ஒரு மணி நேரத்துக்கு இரண்டரை நாழிகைகள். ஆகவே மூன்றேமுக்கால் நாழிகை என்பது ஒன்றரை மணி நேரமாகும். 

ராகு காலத்தின் எல்லாப் பகுதிகளும் கெட்டவை என்று சொல்லமுடியாது. சில குறிப்பிட்ட பகுதிகள் மிகவும் வலு வாய்ந்தவை; ஆற்றல் வாய்ந்தவை.

ராகு காலத்தில் செய்யப்படும் பூஜைகளில் முக்கியமானது துர்க்கை பூஜை. 'ராகு கால துர்க்கா பூஜை' என்று ஒரு தனி வழிபாட்டு முறையே இருக்கிறது.

இதில் மிகவும் விசேடமாகக் கருதப்படுவது செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் செய்யப்படும் பூஜை. இதற்குரிய தெய்வம் 'மங்கல சண்டிகா'. 

செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களால் இடையூறுகள் இருந்தால் செய்யப்படும் பூஜை இந்தப் பூஜை. அதுமட்டுமல்லாது நீண்ட நாட்களாகத் தடங்கலாக இருந்த காரியங்கள் தொடர்ந்து வில்லங்கமில்லாமல் நடப்பதற்காகவும் செய்யப்படுவது. பெண்களுக்குத் திருமணமாவதற்காகவும் இதனைச் செய்வார்கள். இதற்கென பூஜா விதானம் இருக்கிறது.

ஒன்பது வாரங்களுக்கு விரதமிருந்து செய்யப்படுவது இந்தப் பூஜை. எலுமிச்சம்பழத்தை அறுத்து, சாற்றைப் பிழிந்துவிட்டு, அந்த மூடியைப் புரட்டிப்போட்டு, அதில் நெய்யை ஊற்றி, சிறிய திரியைப்போட்டு, தீபம் வைத்து வழிபடுவது வழக்கம். அப்போது 'மங்கல சண்டிகா ஸ்தோத்திரம்' என்னும் வழிபாட்டு மந்திரப் பாடலைப் படிப்பார்கள். 'மங்கலன்' என்பது செவ்வாய் கிரகத்தின் பெயர்களில் ஒன்று. ஆகவேதான் 'மங்கல சண்டிகா' என்ற பெயர். 

செவ்வாய்க்கும் ராகுவுக்கும் கிரகப் பதவி கிடைப்பதற்காக அவர்கள் சண்டிகையை வழிபட்டார்கள் என்ற ஐதீகம். முறையே அவர்களுக்குரிய நாள், நேரம் ஆகியவற்றில் இந்தப் பூஜையைச் செய்தால் காரியசித்தியும் சண்டிகையின் பேரருளும் கிட்டும் என்ற வரத்தையும் அவ்விருவரும் சண்டிகையிடம் பெற்றார்கள் என்று தேவீ பாகவதம் கூறும். ஆகவேதான் செவ்வாய் தோஷம், நாக தோஷம் போன்றவற்றிற்கும் இந்தப் பூஜையை உரிய விரதமிருந்து செய்கிறார்கள். 


மங்கல சண்டிகை ஸ்தோத்திரம்.

தேவீம் ஷோடச வஷியாம் ஸ¤ஸ்த்ர யௌவனாம்பிம்போஷ்டிம் ஸ¤ததீம் சுத்தாம் ஸரத்பத்ம நிபாநநாம்ஸ்வேத சம்பக வர்ணாம் ஸ¤நீலோத்பல லோசநாம்ஜகத் தாத்ரீம் ச தாத்ரீம் ச ஸர்வேப்ய: ஸர்வ ஸம்பதாம்ஸம்ஸார ஸாகரே கோரே ஜ்யோதிரூபாம் ஸதாபஜேதேவ்யாஸ்ச த்யாநம் இத்யேவம் ஸ்தவநம் ஸ்ருயதாம் முநே

ரக்ஷ ரக்ஷ ஜகந்மாத: தேவீ மங்கள சண்டிகேஹாரிகே விபதாம் ராஸே: ஹர்ஷ மங்கள காரிகேஹர்ஷ மங்கள த§க்ஷச ஹர்ஷ மங்கள தாயிகேசுபே மங்களே த§க்ஷச சுபே மங்கள சண்டிகேமங்கள மங்களார்ஹேச ஸர்வமங்கள மங்களேஸதாம் மங்கள தே தேவீஸர்வேஷாம் மங்களாலயேபூஜ்ய மங்களவாரே ச மங்களாபீஷ்ட தேவதேபூஜ்யே மங்கள பூபஸ்ய மநுவம்ஸஸ்ய ஸந்ததம் மங்களாதிஷ்டாத்ரு தேவீ ச மங்களாநாம் ச மங்களேஸம்ஸார மங்களாதாரே மோக்ஷமங்கள தாயினீஸாரே ச மங்களாதாரே பாரே ச ஸர்வகர்மணாம் ப்ரதி மங்களவாரே ச பூஜ்யே மங்கள ஸ¤கப்ரதே

பலஸ்ருதி

ஸ்தோத்ரேணா நேந சம்பிஷ்ச ஸ்துத்வா மங்கள சண்டிகாம்ப்ரதி மங்கள வாரே ராஹ¤ காலௌ ச பூஜாம் தத்வ கதர் சிவாதேவ்யாஸ்ச மங்கள ஸ்தோத்ர ய: ஸ்ருணோதி ஸமாஹித: தத்மங்களம் பவேத் தஸ்ய ந பவேத் தத் மங்களம்வர்த்ததே புத்ர பௌத்ரஸ்ச மங்களம் ச திநே திநே

No comments:

Post a Comment

Irumpili Kali Devotees

LinkWithin

Connect with FB

Disclaimer:

The information provided in this website might be wrong or old information. Please add a comment above to get the information corrected

Labels

#RamaNavami #LordRama #Ramar (1) #இராமநாமமகிமை #ராமநாமமகிமை (1) #உங்களுக்குதெரிந்திருக்கலாம் (1) 27 நட்சித்திரகும் அவர் அவர் நட்சித்திர காயத்திரி (1) Bhakti Yoga (2) Blogger (11) IFTTT (12) jnana yoga (2) lord ganesha (3) lord iyyappan (1) lord murugan (4) Mantras (3) Meditation (1) Nar Seva Narayana Seva (1) Navaratri (1) Sri Chakra Nava Avarana Puja (1) WordPress (1) அகஸ்தியர் (1) அகிலாண்டேஸ்வரி (3) அனுமன் (3) ஆஞ்சநேயர் (1) ஆடி அமாவாசை (1) ஆதித்யன் (1) ஆவணி அவிட்டம் (2) ஏழு கன்னிமார்கள் (1) ஐயப்பன் (3) ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் அபிஷேகம் செய்ய வேண்டிய பொருள்கள் (1) கடை வீடுகளில் திருஷ்டி (2) கந்த சஷ்டி கவசம் (1) கால பைரவர் (3) காளி (13) கோலமிடுவதால் ஏற்படும் நன்மைகள் (2) சகஸ்ர நாம அர்ச்சனை (1) சக்கரத்தாழ்வார் (1) சங்கடஹர சதுர்த்தி (1) சமஸ்கிருத மொழி (1) சம்ஸ்கிருதம் (2) சரஸ்வதி (3) சரஸ்வதி அஷ்டோத்திர சத நாம ஸ்தோத்திரம் (2) சர்வம் கிருஷ்ணார்ப்பணம் அஸ்து (1) சனி திசை (1) சனி புத்தி (1) சிதம்பரம் நடராஜர் (1) சூரிய பகவான் (2) தண்டாயுதபாணி (2) தானம் - பலன்கள் (1) திருப்பதி ஏழுமலையான் (1) திருமண மந்திரங்கள் (2) தீப ஆராதனைகளின் விளக்கங்கள் (2) தீபாவளியின் வரலாறு & தீபாவளி தானம் (3) துர்க்கா தேவி (11) துளசி (1) துளசியின் சிறப்பும் (1) தை மாதம் (1) நவக்கிரக மந்திரங்கள் (3) நாக தோசம் பரிகாரம் -ராகு -கேது (1) நாகசதுர்த்தி விரதம் (1) பசுவின் கோமியத்தில் (1) பஞ்ச தெய்வங்கள் (2) பிரகதீஸ்வரர் (1) பிரகஸ்பதி (1) பிரதோஷ கால முறை (2) பெருமையும் (1) முத்துக்குமரன் (3) வல்லப மஹா கணபதி (2) வள்ளி மணாளன் (3) விறல் மாரனைந்து திருப்புகழை (1) வீட்டில் பூஜைகளில் உபயோகிக்கக் கூடாத சுவாமி படங்கள் (2) வேலை கிடைக்க மந்திரம் (2) ஸ்ரீ சரபேஸ்வரர் (2) ஸ்ரீ லட்சுமி சங்கு ஸ்லோகம் (1) ஹயக்ரீவர் (1)