Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing

Showing posts with label தீப ஆராதனைகளின் விளக்கங்கள். Show all posts
Showing posts with label தீப ஆராதனைகளின் விளக்கங்கள். Show all posts

Sunday, 16 November 2014

தீப ஆராதனைகளின் விளக்கங்கள்

வீடுகளில் முன்பகுதியில் அமைந்த முற்றங்களில் மகளிர் மாலை நேரத்தில் விளக்குகளை வைத்து நெல், மலர் இட்டு வழிபட்ட செய்திகள் நெடுநல்வாடை, மதுரைக் காஞ்சி முதலிய இலக்கியங்களில் உள்ளன. திருஞானசம்பந்தர் காலத்திலேயே கார்த்திகை மாத விளக்கு வழிபாடு தொன்மையானது எனக் கூறப்பட்டுள்ளது. தொல் கார்த்திகை நாள்... தையலார் கொண்டாடும் விளக்கீடு என்பது அவர் வாக்கு.
1. வீடுகளில் விளக்கு வழிபாடு
2. பொது இடங்களான மண்டபங்கள், கோவில் மண்டபங்கள் முதலிய இடங்களில் பலர் கூடி விளக்கேற்றி வழிபடுதல்,
3. கோவில்களில் விளக்கு ஏற்றுதல்,
4. பூசை நேரங்களில் பலவகையான அலங்கார தீபங்கள் காட்டுதல் என்று விளக்கு வழிபாட்டை வகைப்படுத்திக் கொள்ளலாம்.
1. வீடுகளில் மாலை நேரம், சிறப்பு நாட்கள் முதலிய காலங்களில் விளக்கேற்றி வழிபாடு செய்தல் நல்லது. வீட்டுக்கு மங்கலம், எட்டுத்திருமகளிரும் (அஷ்ட லட்சுமிகள் அருள் செய்வர்.
2. கூட்டு வழிபாட்டைப்பலரும் ஒரே தன்மையான விளக்குகளை வைத்து நெய் அல்லது எண்ணெய் ஊற்றிப் பற்றவைத்து குங்குமம் அல்லது மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம்.
விளக்கு போற்றி என்று நூல்கள் வந்துள்ளது. ஒருவர் போற்றி சொல்ல மற்றவர் பின்தொடர்ந்து சொல்லி நிறைவின் போது படையலிட்டுக் கற்பூரங்காட்டி வழிபடலாம். பலரும் ஒன்று சேர்வது சமுதாய ஒற்றுமைக்குக் காரணமாக அமையும். ஐந்து திரியிட்டுச் சுடரேற்றி வழிபடும் விளக்கில் மலைமகள், கலைமகள், அலைமகள் மூவரும் அமர்ந்து அருள் செய்வர்.
3. திருக்கோவில்களில் விளக்கு வைப்பது புண்ணியமாக முன்பு கருதப்பட்டது. திருமறைக்காட்டில் எலி ஒன்று கோவிலில் எரிந்து கொண்டிருந்த விளக்கில் நெய் உண்ணப் புகுந்தது. சுடர் மூக்கைச்சுடர் திரியை எலி தூண்டியது. அணையும் விளக்கு நன்றாக எரியத் தொடங்கியது.
இந்த புண்ணியத்தால் எலி அடுத்த பிறப்பில் மூன்று உலகங்களையும் ஆளுகின்ற மாவலிச்சக்கரவர்த்தியாக ஆயிற்று. நாயன்மார்களில் கலியநாயனார் நமிநந்தியடிகள், கணம்புல்ல நாயனார் ஆகியோர் கோவிலில் விளக்கு ஏற்றியதால் அவர்கள் இறைவன் திருவருள் பெற்றவர்கள் ஆவர். கோவில்களில் வைக்கப்பெறும் விளக்கினை நந்தியா தீபம், சந்தியா தீபம் எனக் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன.
அணையாமல் எரியும் தீபம் நந்தியா தீபம், நந்தா தீபம், நூந்தா தீபம் எனப் பலவாறாக வழங்கப்பெறும். பூஜை நேரமான காலை, நண்பகல், மாலை, இரவு முதலிய சந்திகளில் வைக்கப் பெறும் தீபம் சந்தியா தீபம் ஆகும். பூசைக் காலங்களில் முதலில் திரை போடப்பெறும் பின் அலங்கார தீபம் காட்டும் போது திரை நீக்கப்பெறும், தீபம் காட்டும் அர்ச்சகர் பலவித அலங்கார தீபங்களை முறையாகக் காட்டுவார்.
ஆன்மாவின் பிரதிநிதியாகிய வாகனம், மூலமூர்த்தியைக் காணமுடியாமல் ஒரு மறைப்பு, திரோதானம் உண்டாக்குகின்றது. அது ஆணவ மலம் எனும் தடையாகும். ஆணவ மலம் எனும் தடை நீங்கினால் திரை நீங்கினால் மூலமூர்த்தியைக் காணலாம்.
அர்ச்சகர் தீபம் காட்டினால் நன்றாகக் காணமுடியும். அர்ச்சகர் ஞானாச்சாரியரைக் குறிக்கும். விளக்கு ஞானத்தைக் குறிக்கும். ஆணவம் நீங்க ஞானாச்சாரியர் ஞானத்தைக் கொடுக்க இறைவனைக் காணலாம். உலகத்தில் வெளிச்சம் வருதலும் இருள் நீங்குதலும் ஒரே சமயத்தில் நடைபெறும். அதுபோல ஞானாச்சாரியரால் ஞானம் வருதலும் ஆணவம் நீங்கலும் ஒரே சமயத்தில் நடைபெறும்.
கோவிலில் திரை நீங்குதெலும் அர்ச்சகர் அலங்கார தீபம் காட்டுதலும் ஒரே சமயத்தில் நடைபெறும். எனவே விளக்கு ஞானத்தின் அறிகுறியாகும். "விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்'' என்று திருநாவுக்கரசரும் பாடியுள்ளார். எனவே கோவிலில் காட்டப்பெறும் அலங்கார தீபம் ஞானத்தின் அறிகுறியாகும்.
பதினாறு வகை உபசாரங்களில் ஒன்று தீபாராதனை, பூஜைக் காலத்தில் பலவித தீபங்கள் காட்டப்பெறுகின்றன. தீபாராதனைக் காலத்தில் தெய்வங்கள் பலவும் தீபங்களில் வந்து அமர்ந்து இறைவனை தரிசித்துச் செல்வார்கள் என்பது மரபு. பல அடுக்குகளைக் கொண்ட நட்சத்திர தீபம் முதல் பல தீபங்கள் காட்டப்பெறுகின்றன.
நட்சத்திரங்கள் இறைவனை வழிபட்டு ஒளி பெறுகின்றன. நட்சத்திர தீபம் காட்டப்பெறுகின்றது ஒன்பது தீபங்கள் நவசக்திகளைக் குறிக்கும். ஏழு தீபங்கள் சப்தமாதர்களைக் குறிக்கும். ஐந்து தீபங்கள்-நிவிர்த்திகலை, பிரதிட்டாகலை, வித்தியாகலை, சாந்திகலை, சாந்தி அதீதகலை என்ற ஐந்து கலைகளைக் குறிக்கும்.
மூன்று தீபம் சந்திரன், சூரியன், அக்னி என்ற மூன்று ஒளிகளைக் குறிக்கும். ஒற்றைத் தீபம் சரசுவதியையும், சுவாகாதேவியையும் குறிக்கும். ஐந்து தட்டுக்களில் தீபம் ஏற்றுதல் இறைவனுடைய ஐந்து முகங்களைக் குறிக்கும். மந்திரங்களுள் பஞ்சப்பிரம மந்திரங்கள் சிறப்புடையன.
1. ஈசானம் 
2. தத்புருடம் 
3. அகோரம் 
4. வாமதேவம் 
5. சத்யோசாதம்

என்ற ஐந்தும் பஞ்சப்பிரம மந்திரங்கள் எனப்படும். ஏனைய மந்திரங்களுக்கு முன்னே தோன்றியதாலும், ஏனைய மந்திரங்களுக்கு காரணமாக இருப்பதாலும் பஞ்சப் பிரம மந்திரங்களே சிறந்தன என்று சிவஞானசித்தியார் குறிப்பிடுகின்றது.
அந்தந்த மந்திரங்களால் அந்தந்த முகத்தைத் தரிசிப்பது என்ற முறையில் ஐந்து தட்டுத் தீபங்கள் காண்பிக்கப்படுகின்றன. இறுதியாக கும்ப தீபம் காண்பிக்கப் பெறும். கும்ப தீபம் சதாசிவ தத்துவத்தை குறிக்கும். அனைத்தும் சதாசிவத்துள் ஒடுங்கும் என்ற முறையில் அமைந்தது.
இறுதியாகக் புருட தீபம், மிருக தீபம், பட்ச தீபம், வார தீபம், ருத்ர தீபம் முதலிய தீபங்கள் காட்டும் போது அந்தந்த தீபத்திற்குரியவர்கள் அந்தந்த உருவில் வந்து இறைவனை வழிபடுகிறார்கள் என்பது கருத்து. தீபாராதனை செய்யும் போது மூன்று முறை காட்ட வேண்டும். முதன் முறை காட்டுவது உலக நலத்கருதியது.
இரண்டாம் முறை கோவில் உள்ள ஊர்மக்கள் நலத்கருதியது. மூன்றாம் முறை ஐம்பெரும் பூதங்களால் இடையூறின்றி நலம் பயக்க வேண்டும் என்பதாகும் தீபாராதனை காட்டும் போது இடப்பக்கத் திருவடிவில் தொடங்கி இடை, மார்பு, கழுத்து, நெற்றி, உச்சி என்ற முறையில் உயர்த்தி வட்டமாக வலப்பக்கம் தோள், மார்பு, இடை, பாதம் என்ற அளவில் `ஓம்' என்னும் பிரணவ வடிவில் காட்ட வேண்டும். தீபாராதனைக்குப்பின் கற்பூரம் காட்ட வேண்டும்.

Monday, 13 October 2014

ஶ்ரீ கணேஶபுராணே ஶ்ரீ கணேஶ கவசம்


ஏஷோதி சபலோ தைத்யான் பால்யேபி னாஶயத்யஹோ |அக்ரே கிம் கர்ம கர்தேதி ன ஜானே முனிஸத்தம || 1 ||
தைத்யா னானாவிதா துஷ்டாஸ்ஸாது தேவத்ருமஃ கலாஃ |அதோஸ்ய கம்டே கிம்சித்த்யம் ரக்ஷாம் ஸம்பத்துமர்ஹஸி || 2 ||
த்யாயேத் ஸிம்ஹகதம் வினாயகமமும் திக்பாஹு மாத்யே யுகேத்ரேதாயாம் து மயூர வாஹனமமும் ஷட்பாஹுகம் ஸித்திதம் | ஈத்வாபரேது கஜானனம் யுகபுஜம் ரக்தாம்கராகம் விபும் துர்யேது த்விபுஜம் ஸிதாம்கருசிரம் ஸர்வார்ததம் ஸர்வதா || 3 ||
வினாயக ஶ்ஶிகாம்பாது பரமாத்மா பராத்பரஃ |அதிஸும்தர காயஸ்து மஸ்தகம் ஸுமஹோத்கடஃ || 4 ||
லலாடம் கஶ்யபஃ பாது ப்ரூயுகம் து மஹோதரஃ |னயனே பாலசம்த்ரஸ்து கஜாஸ்யஸ்த்யோஷ்ட பல்லவௌ || 5 ||
ஜிஹ்வாம் பாது கஜக்ரீடஶ்சுபுகம் கிரிஜாஸுதஃ |வாசம் வினாயகஃ பாது தம்தான்‌ ரக்ஷது துர்முகஃ || 6 ||
ஶ்ரவணௌ பாஶபாணிஸ்து னாஸிகாம் சிம்திதார்ததஃ |கணேஶஸ்து முகம் பாது கம்டம் பாது கணாதிபஃ || 7 ||
ஸ்கம்தௌ பாது கஜஸ்கம்தஃ ஸ்தனே விக்னவினாஶனஃ |ஹ்றுதயம் கணனாதஸ்து ஹேரம்போ ஜடரம் மஹான் || 8 ||
தராதரஃ பாது பார்ஶ்வௌ ப்றுஷ்டம் விக்னஹரஶ்ஶுபஃ |லிம்கம் குஹ்யம் ஸதா பாது வக்ரதும்டோ மஹாபலஃ || 9 ||
கஜக்ரீடோ ஜானு ஜம்கோ ஊரூ மம்களகீர்திமான் |ஏகதம்தோ மஹாபுத்திஃ பாதௌ குல்பௌ ஸதாவது || 10 ||
க்ஷிப்ர ப்ரஸாதனோ பாஹு பாணீ ஆஶாப்ரபூரகஃ |அம்குளீஶ்ச னகான் பாது பத்மஹஸ்தோ ரினாஶனஃ || 11 ||
ஸர்வாம்கானி மயூரேஶோ விஶ்வவ்யாபீ ஸதாவது |அனுக்தமபி யத் ஸ்தானம் தூமகேதுஃ ஸதாவது || 12 ||
ஆமோதஸ்த்வக்ரதஃ பாது ப்ரமோதஃ ப்றுஷ்டதோவது |ப்ராச்யாம் ரக்ஷது புத்தீஶ ஆக்னேய்யாம் ஸித்திதாயகஃ || 13 ||
தக்ஷிணஸ்யாமுமாபுத்ரோ னைறுத்யாம் து கணேஶ்வரஃ |ப்ரதீச்யாம் விக்னஹர்தா வ்யாத்வாயவ்யாம் கஜகர்ணகஃ || 14 ||
கௌபேர்யாம் னிதிபஃ பாயாதீஶான்யாவிஶனம்தனஃ |திவாவ்யாதேகதம்த ஸ்து ராத்ரௌ ஸம்த்யாஸு யஃவிக்னஹ்றுத் || 15 ||
ராக்ஷஸாஸுர பேதாள க்ரஹ பூத பிஶாசதஃ |பாஶாம்குஶதரஃ பாது ரஜஸ்ஸத்த்வதமஸ்ஸ்ம்றுதீஃ || 16 ||
ஜ்ஞானம் தர்மம் ச லக்ஷ்மீ ச லஜ்ஜாம் கீர்திம் ததா குலம் | ஈவபுர்தனம் ச தான்யம் ச க்றுஹம் தாராஸ்ஸுதான்ஸகீன் || 17 ||
ஸர்வாயுத தரஃ பௌத்ரான் மயூரேஶோ வதாத் ஸதா |கபிலோ ஜானுகம் பாது கஜாஶ்வான் விகடோவது || 18 ||
பூர்ஜபத்ரே லிகித்வேதம் யஃ கம்டே தாரயேத் ஸுதீஃ |ன பயம் ஜாயதே தஸ்ய யக்ஷ ரக்ஷஃ பிஶாசதஃ || 19 ||
த்ரிஸம்த்யம் ஜபதே யஸ்து வஜ்ரஸார தனுர்பவேத் |யாத்ராகாலே படேத்யஸ்து னிர்விக்னேன பலம் லபேத் || 20 ||
யுத்தகாலே படேத்யஸ்து விஜயம் சாப்னுயாத்த்ருவம் |மாரணோச்சாடனாகர்ஷ ஸ்தம்ப மோஹன கர்மணி || 21 ||
ஸப்தவாரம் ஜபேதேதத்தனானாமேகவிம்ஶதிஃ |தத்தத்பலமவாப்னோதி ஸாதகோ னாத்ர ஸம்ஶயஃ || 22 ||
ஏகவிம்ஶதிவாரம் ச படேத்தாவத்தினானி யஃ |காராக்றுஹகதம் ஸத்யோ ராஜ்ஞாவத்யம் ச மோசயோத் || 23 ||
ராஜதர்ஶன வேளாயாம் படேதேதத் த்ரிவாரதஃ |ஸ ராஜானம் வஶம் னீத்வா ப்ரக்றுதீஶ்ச ஸபாம் ஜயேத் || 24 ||
இதம் கணேஶகவசம் கஶ்யபேன ஸவிரிதம் |முத்கலாய ச தே னாத மாம்டவ்யாய மஹர்ஷயே || 25 ||
மஹ்யம் ஸ ப்ராஹ க்றுபயா கவசம் ஸர்வ ஸித்திதம் |ன தேயம் பக்திஹீனாய தேயம் ஶ்ரத்தாவதே ஶுபம் || 26 ||
அனேனாஸ்ய க்றுதா ரக்ஷா ன பாதாஸ்ய பவேத் வ்யாசித் |ராக்ஷஸாஸுர பேதாள தைத்ய தானவ ஸம்பவாஃ || 27 ||
|| இதி ஶ்ரீ கணேஶபுராணே ஶ்ரீ கணேஶ கவசம் ஸம்பூர்ணம் ||

Irumpili Kali Devotees

LinkWithin

Connect with FB

Disclaimer:

The information provided in this website might be wrong or old information. Please add a comment above to get the information corrected

Labels

#RamaNavami #LordRama #Ramar (1) #இராமநாமமகிமை #ராமநாமமகிமை (1) #உங்களுக்குதெரிந்திருக்கலாம் (1) 27 நட்சித்திரகும் அவர் அவர் நட்சித்திர காயத்திரி (1) Bhakti Yoga (2) Blogger (11) IFTTT (12) jnana yoga (2) lord ganesha (3) lord iyyappan (1) lord murugan (4) Mantras (3) Meditation (1) Nar Seva Narayana Seva (1) Navaratri (1) Sri Chakra Nava Avarana Puja (1) WordPress (1) அகஸ்தியர் (1) அகிலாண்டேஸ்வரி (3) அனுமன் (3) ஆஞ்சநேயர் (1) ஆடி அமாவாசை (1) ஆதித்யன் (1) ஆவணி அவிட்டம் (2) ஏழு கன்னிமார்கள் (1) ஐயப்பன் (3) ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் அபிஷேகம் செய்ய வேண்டிய பொருள்கள் (1) கடை வீடுகளில் திருஷ்டி (2) கந்த சஷ்டி கவசம் (1) கால பைரவர் (3) காளி (13) கோலமிடுவதால் ஏற்படும் நன்மைகள் (2) சகஸ்ர நாம அர்ச்சனை (1) சக்கரத்தாழ்வார் (1) சங்கடஹர சதுர்த்தி (1) சமஸ்கிருத மொழி (1) சம்ஸ்கிருதம் (2) சரஸ்வதி (3) சரஸ்வதி அஷ்டோத்திர சத நாம ஸ்தோத்திரம் (2) சர்வம் கிருஷ்ணார்ப்பணம் அஸ்து (1) சனி திசை (1) சனி புத்தி (1) சிதம்பரம் நடராஜர் (1) சூரிய பகவான் (2) தண்டாயுதபாணி (2) தானம் - பலன்கள் (1) திருப்பதி ஏழுமலையான் (1) திருமண மந்திரங்கள் (2) தீப ஆராதனைகளின் விளக்கங்கள் (2) தீபாவளியின் வரலாறு & தீபாவளி தானம் (3) துர்க்கா தேவி (11) துளசி (1) துளசியின் சிறப்பும் (1) தை மாதம் (1) நவக்கிரக மந்திரங்கள் (3) நாக தோசம் பரிகாரம் -ராகு -கேது (1) நாகசதுர்த்தி விரதம் (1) பசுவின் கோமியத்தில் (1) பஞ்ச தெய்வங்கள் (2) பிரகதீஸ்வரர் (1) பிரகஸ்பதி (1) பிரதோஷ கால முறை (2) பெருமையும் (1) முத்துக்குமரன் (3) வல்லப மஹா கணபதி (2) வள்ளி மணாளன் (3) விறல் மாரனைந்து திருப்புகழை (1) வீட்டில் பூஜைகளில் உபயோகிக்கக் கூடாத சுவாமி படங்கள் (2) வேலை கிடைக்க மந்திரம் (2) ஸ்ரீ சரபேஸ்வரர் (2) ஸ்ரீ லட்சுமி சங்கு ஸ்லோகம் (1) ஹயக்ரீவர் (1)